Sunday, September 5, 2010

இறவாத இரவுகள்


கடல் மணலில் சிற்பம் வடித்தேன்
கடற்கரையில் கிளிஞ்சல்கள் தேடினேன்
காற்றினில் ஓவியம் வரைந்தேன்
இயற்கையின் அழகில் தொலைத்த என்
இதயத்தை நீ எப்போது சிறை எடுத்தாய்?
உன் அன்பின் அதிர்வுகள் என்னை ஆட்கொண்ட
நொடியிலினிருந்து என் இரவுகள்
உன் நிலவொளியால் இறவாத இரவு ஆனது.

Saturday, May 2, 2009

நினைவெலாம் நீ




விழி மூடமறந்தேன் உன் விழிகளை பார்த்திட!!
இன்று என் வழி தீடி தவிக்கின்றேன் உந்தன் காலடி சுவடுகள் தொலைத்திட!!
கற்பனைகள் போதாதடி என் காதலை உனக்கு கற்பிக்க!!
இன்று பல ஆண்டுகள் காத்திருப்பேன் நம் கைகள் இணைந்திட!!
எந்தன் நினைவுகள் எனக்கு நினைவில்லையடி உந்தன் நினைவுகள் நான் சுமந்திட!!
இன்று உன் அருகில் நான் இல்லை, உன்னை மறந்தால் எனக்கு விடியலும் இல்லையடி!!
சில நொடிகள் போதாதடி உன் பூ இதழ்களை முத்தமிட!!
இன்று ஒரு ஜென்மம் போதாதடி நான் உன்னை காதலிக்க!!!!!!!!!!!

Sunday, January 4, 2009

இறைவனை காதலிக்கின்றேன் !!


வண்டுகள் பூ இதழ்களை தேடிசெல்வது
பூக்களின் மேல் கொண்ட காதலால்!!


கடல் அலைகள் கரையை தொட்டு ரசிப்பது
கரையின் மீது கொண்ட காதலால் !!


மழைத்துளிகள் பூமியை கட்டி அணைப்பது
பூமியின் மீது கொண்ட காதலால் !!


பூங்காற்று புல்வெளியை தீண்டுவது
புல்வெளி மீது கொண்ட காதலால் !!



கதிரவனின் கதிர்கள் தாமரையை மலரந்திடசெய்வது
தாமரையின் மீது கொண்ட காதலால் !!


பால்நிலவு இரவு பொழுதை அழகாக்குவது
இரவின் மீது கொண்ட காதலால் !!



இத்தனை காதலர்களையும்
அவர்களின் காதலையும்
படைத்த இறைவா
உன்னையும் நான் காதலிக்கின்றேன் என்றென்றும் !!

இந்த கவிதை ஆதரவு அற்ற குழந்தைகளுக்காக!!

இறைவா உன்னை வெறுத்தேன்
"அழகான மலர்களை படைத்த நீ
அவை வாடிபோக செய்ததால்"
"ஆறு அறிவு கொண்ட மனிதனை படைத்த நீ
அவர்களிடம் ஒற்றுமை இல்லாமல் செய்த்தால் "
"பொர்ணமி நிலவை படைத்த நீ
தினந்தோறும் தேய்ந்திட செய்ததால்"

"துள்ளி குதிக்கும் கடல் அலைகளை உருவாக்கிய நீ
சுனாமி என்ற பேர் அலைகளை தூண்டியதல்"
"இணை இல்லா செல்வங்களை படைத்த நீ
பசி மற்றும் ஏழ்மையை உருவாகியதால்"



இவை அனைத்திற்கும் மேலாக இன்று உன்னை நேசிக்கிறேன் ஏனெனில்???
"அன்பும் , அரவணைப்பும், கருணை உள்ளம், உதவும் எண்ணம் கொண்ட சில அன்பு இதயங்களை எங்களுக்கு உதவ இந்த உலகிற்கு நீ தந்ததால்"
இப்படிக்கு "ஆதரவற்ற விடுதியுள் மற்றவர்களின் அன்புக்காக ஏங்கும் மாணவன்"

உன்னை நினைத்த அவன்


உன்னை பார்த்தபின் "இமைக்க மறந்தது என் கண்கள்"
நீ பாடும் பாட்டை கேட்டபின் "இசையை ரசிக்க மறந்தது என் செவிகள்"
உன்னை நினைத்தபின் " வேறொரு பெண்ணை நினைக்க மறந்தது என் இதயம்"
உன் பேச்சை கேட்டபின் "கவிதைகளை ரசிக்க மறந்தது என் மனது"
உன் மூச்சு காற்றை முகர்ந்தபின் "தென்றலின் இனிமையை ரசிக்க மறந்தது என் தேகம்"
இன்று ,,
உன்னை காதலித்த பின் "இந்த காதலும் கடவுளாக தெரிந்தது என் இதயத்திற்கு"

Friday, January 2, 2009

யாரை நீ காதலிக்கிறாய்???




நிலவை காதலிக்கிறேன் தேய்ந்து விடும் என்ற வருத்தத்தால் !!
தாயை காதலிக்கிறேன் அரவணைக்கும் இதயம் என்ற பாசத்தால்!!
என் தங்கையை காதலிக்கிறேன் அடுத்த தாயாக போகின்றவள் என்ற மரியாதையால்!!
இறைவனை காதலிக்கிறேன் இத்தனை அழகான இயற்கையை படைத்ததால் !!
மலர்களை காதலிக்கிறேன் வாடி போகின்றன என்ற ஏக்கத்தால்!!
புற்களை காதலிக்கிறேன் மிதிபடுகிறதே என்ற வருத்தத்தால்!!
நண்பனை காதலிக்கிறேன் தோல் கொடுப்பவன் என்ற தோழமையால்!!

எத்தனையோ காதலை காதலோடு காதலிக்கின்ற காதலன்
என்னிடம்
"யாரை நீ காதலிக்கிறாய் ??? " என்ற கேள்வி ஏன் ??

என் நினைவில் நின்ற அவள்..........!!!


நிலவு வெட்கப்படும் உன் முகம் பார்த்தால்!!


வானம் வளைந்து கொடுக்கும் நீ அதை எட்டி பிடிக்க விரும்பினால்!!


மொட்டுகள் மலரும் நீ புன்னகை செய்தால் !!


வார்த்தைகளும் கவிதை ஆகும் அதை நீ உச்சரிதால்!!


தென்றல் உன்மடியில் சாயும் உன் நறுமணம் பட்டால்!!


காகை சிறகுகளும் அழகாக தெரியும் அதை நீ ரசித்தால்!!


விக்களும் பிடிக்கும் எனக்கு நினைப்பது நீ என்று தெரிந்தால்!!


அன்பே என் வாழ்கையும் விடியலாகும் நீ எந்தன் காதலி ஆனால் !!