Sunday, September 5, 2010

இறவாத இரவுகள்


கடல் மணலில் சிற்பம் வடித்தேன்
கடற்கரையில் கிளிஞ்சல்கள் தேடினேன்
காற்றினில் ஓவியம் வரைந்தேன்
இயற்கையின் அழகில் தொலைத்த என்
இதயத்தை நீ எப்போது சிறை எடுத்தாய்?
உன் அன்பின் அதிர்வுகள் என்னை ஆட்கொண்ட
நொடியிலினிருந்து என் இரவுகள்
உன் நிலவொளியால் இறவாத இரவு ஆனது.